ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள்: மேக்ஸ்வெல் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் அதிவேக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :15 நவம்பர் 2024, 11:52 am IST

அனைத்துவிதமான, டி20 போட்டிகளையும் சேர்த்து அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், பிக்-பாஸ் போட்டிகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தப் போட்டியில் 12 ரன்கள் எடுத்த போது அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த முதல்வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மேக்ஸ்வெல். இவர் 6505 பந்துகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் உள்ளனர்.

குறைந்த பந்துகளில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்தவர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.