இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் 2ஆம் நாளை முடித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மொத்தம் 11 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜாகீர் கானை சமன்செய்துள்ளார்.
சொந்த மண்ணில் 2 முறையும் வெளிநாடுகளில் 9 முறையும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மொத்தமாக சொந்த மண்ணில் 12 போட்டிகளில் 43 விக்கெட்டுகளும் வெளிநாடுகளில் 131 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.
பொதுவாக அனைவரும் சொந்த மண்ணில் சிறப்பாக பந்துவீசும்போது பும்ரா வெளிநாட்டில் அசத்தியுள்ளார். பும்ராவின் 73.58 சதவிகித விக்கெட்டுகள் வெளிநாட்டில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் அதிகமுறை வெளிநாட்டில் 5 விக்கெட்டுகள் எடுத்தவர்களில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ (21) முதலிடத்தில் இருக்கிறார். மெக்ரத் (18), வாசிக் அக்ரம் (17) அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள்.
இதையும் படிக்க: மெக்கல்லம் சாதனையை முறியடித்த ஜெய்ஸ்வால்!
இந்தியாவின் கபில்தேவ் வெளிநாட்டில் 12 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ஆனால், பும்ராவின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 73 சதவிகித விக்கெட்டுகள் வெளிநாடுகளில் என்பது வியக்கதக்க சாதனையாகவே இருக்கிறது.
இந்தத் தொடரில் இன்னும் 4 போட்டிகள், ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ள நிலையில் பல சாதனைகளை பும்ரா முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி; இளைஞா் மீது வழக்குப் பதிவு

ஆப்கனுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

டி20 தொடர்களில் பும்ரா, ஹார்திக் சேர்க்கப்படாதது ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன்..! நியூசிலாந்து தடுமாற்றம்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



