இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தனது புதிய டாட்டூவிற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என அபார வெற்றி பெற்றது. அக்.6., அக்.9., அக்.12 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
கடவுளின் திட்டம்
பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் ரிங்கு சிங் விடியோவை வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் தனது கடவுளின் திட்டம் என்ற புதிய டாட்டூவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விடியோவில் ரிங்கு சிங் கூறியதாவது:
நான் இந்த டாட்டூவை கடவுளின் திட்டம் என்றுதான் சொல்லுவேன். அதன் அடிப்படையில்தான் இந்த டாட்டூவை உருவாக்கினேன். சில வாரங்களுக்குப் முன்புதான் இந்த யோசனை கிடைத்தது. கடவுளின் திட்டம் என்ற வார்த்தை வட்டத்துக்குள் இருக்குமாறு பொறிக்கப்பட்டுள்ளது. அது சூரியனை குறிப்பதாகும்.
இதையும் படிக்க: 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்ற மும்பை!
நான் ஐபிஎல்-இல் அடித்த 5 சிக்ஸர்களை குறிக்கவே இந்த டாட்டூவை பயன்படுத்தினேன். அந்த சிக்ஸர்கள்தான் எனது வாழ்க்கையை மாற்றியது. அதனால் அதை எனது டாட்டூவில் இணைத்துக்கொள்ள விரும்பினேன் எனக் கூறியுள்ளார்.
2023இல் கொல்கத்தா அணிக்காக ரிங்கு சிங் விளையாடும்போது குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த யஷ் தயாள் ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து முக்கியமான வெற்றிக்கு வித்திட்டார் ரிங்கு சிங்.
டி20க்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதீஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!
கிரிக்கெட்டில் புதுவரவு!
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



