இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.
ரஹானே தலைமையிலான மும்பை அணியும் ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதின. 5 நாள்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 537 ரன்கள் எடுத்தது.
அதைத் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் மும்பை அணி 329/8 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 5 நாள்களும் முடிவடைந்தது. இதனால் ஆட்டம் டிராவாக முடிந்தது.
ஆனால் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி அதிகமான ரன்களை எடுத்திருந்ததால் மும்பை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கடைசி இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தனுஷ் கோடியான் சதமடித்தார்.
இது மும்பையின் 15ஆவது கோப்பையாகும். 27ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோப்பையை வெல்வதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மோசமான தோல்விக்கு விளக்கமளித்த இந்திய மகளிரணி கேப்டன்!
கடைசியாக 1997-1998 சீசனில் வென்றது. அதன்பின் 8 முறை இறுதிப் போட்டி வந்தும் தோல்வியடைந்தது. கடைசியாக 2015- 16 சீசனில் இறுதிப் போட்டி வந்திருந்தது.
இரட்டைச் சதம் விளாசிய சர்ஃபராஸ் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


