காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மோசமான தோல்விக்கு விளக்கமளித்த இந்திய மகளிரணி கேப்டன்!

மகளிர் டி20 உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பேசியதாவது..

ஹர்மன்பிரீத் கௌர்

Published On :

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில்160/4 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வி குறித்து கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கூறியதாவது:

இன்று எங்களது சிறந்த கிரிக்கெட்டினை விளையாடவில்லை. எந்தெந்த இடங்களில் முன்னேற வேண்டுமென கலந்தாலோசிக்க வேண்டும். இனி அனைத்து போட்டிகளும் முக்கியமானவை. நாங்கள் சிறப்பாக விளையாடியாக வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால், எங்களைவிட நியூசி. சிறப்பாக விளையாடினார்கள் என்பதே உண்மை.

கேட்ச்களை விடுதல் என்பது கூடவே கூடாது. இந்த மாதிரியான பெரிய தொடர்களில் இந்தத் தவறுகளை செய்யக்கூடாது. நாங்கள் 160-170 ரன்களை பலமுறை சேஸிங் செய்திருக்கிறோம். ஆனால், இந்த ஆடுகளத்தில் இது 10-15 ரன்கள் அதிகமென நினைக்கிறேன்.

நியூசிலாந்தின் அதிரடியான தொடக்கத்தைப் பார்த்து 180 போகுமென நினைத்தேன். இந்த உலகக் கோப்பை தொடரில் இது நாங்கள் எதிர்பார்க்காத ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.