2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மிக மோசமான பேட்டிங்..! 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா. - Shailendra Bhojak

Published On :

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வருகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியின் 5 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். உணவு இடைவேளை வரை இந்திய அணி 34/6 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விளையாடிய அஸ்வினும் டக் அவுட்டானார்.

தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களுக்கு 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி.

மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி. - Shailendra Bhojak

மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள், வில்லியம் ரூர்க்கே 4 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

இந்திய அணியின் ஸ்கோர் கார்டு

ஜெய்ஸ்வால் - 13

ரோஹித் சர்மா - 2

விராட் கோலி - 0

சர்ஃபராஸ் கான் - 0

ரிஷப் பந்த் - 20

கே.எல்.ராகுல் - 0

ரவீந்திர ஜடேஜா -0

ரவி அஸ்வின் - 0

ஜஸ்பிரீத் பும்ரா - 1

குல்தீப் யாதவ் - 2

முகமது சிராஜ் -4*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.