தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

6,0,6,6,6: 37 வயதிலும் அதிரடி காட்டும் கைரன் பொல்லார்ட்! (விடியோ)

சிபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் பிரபல வீரர் கைரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி வருகிறார்.

News image

ஆட்ட நாயகன் விருது பெற்ற கைரன் பொல்லார்ட். - படம்: எக்ஸ் / சிபிஎல் டி20

Updated On :11 செப்டம்பர் 2024, 3:43 pm IST

முன்னாள் மே.இ.தீ. அணி வீரர் கைரன் பொல்லார்டு கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

முதலில் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 187 /6 ரன்கள் அடித்தது. இந்த அணிக்கு டு பிளெஸ்ஸி கேப்டனாக இருக்கிறார். 188 ரன்கள் இலக்குடம் விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த அணிக்கு கைரன் பொல்லார்ட் கேப்டனாக இருக்கிறார். 19 பந்துகளில் 52 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்படும்போது 19ஆவது ஓவரை மேத்திவ் போர்ட் வீச வந்தார். அவரது ஓவரில் 0,6,0,6,6,6 என மொத்தம் 24 ரன்கள் அடித்து பொல்லார்ட் அசத்தினார். 37 வயதிலும் அதிரடியாக விளையாடும் பொல்லார்ட்டின் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

பொல்லார்ட் அணி புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் வகித்துள்ளது.

பொல்லார்ட் மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.