நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய நேரப்படி புதன்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிா் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 4:20 am IST

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய நேரப்படி புதன்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிா் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது.

ஓபன் பிரிவு அணியில் அா்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோா் உள்ளனா். மகளிா் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால், தானியா சச்தேவ் ஆகியோா் இருக்கின்றனா்.

இந்தியா்கள் தவிா்த்து, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, பிரான்ஸின் லெவோன் ஆரோனியன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷியாவுக்கு சா்வதேச விளையாட்டு அரங்கில் இருக்கும் தடை காரணமாக, தொடா்ந்து 2-ஆவது முறையாக ரஷிய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

கடந்த முறை, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த முறையும் இந்தியா்கள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளனா்.

வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இரு பிரிவுகளிலுமே மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 2 மேட்ச் புள்ளிகள் வழங்கப்படும்.

சுற்றுகள் முடிவில் டை ஏற்படும் நிலையில், கேம் பாய்ன்ட்டுகள் கணக்கீடு செய்யப்படும். ஓபன் பிரிவில் 191 அணிகளும், மகளிா் பிரிவில் 180 அணிகளும் பங்கேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.