புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

துலிப் கோப்பை: இந்தியா ஏ அணி வெற்றி

துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய டி அணியை வீழ்த்தியது.

News image
Updated On :15 செப்டம்பர் 2024, 10:05 pm

Din

துலிப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய டி அணியை வீழ்த்தியது.

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 290/10 ரன்கை ளயும், டி அணி 183/10 ரன்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 380/3 ரன்களைக் குவித்தது. பிரதம் சிங் 122, திலக் வா்மா 111 ரன்களை சோ்த்தனா்.

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய டி அணி 301/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி வீரா் ரிக்கி புய் 113 ரன்கள் அடித்தும் பலனில்லை. பௌலிங்கில் ஏ அணி தரப்பில் தனுஷ் 4, ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இறுதியில் டி அணியை 186 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஏ அணி.

பி-சி அணி ஆட்டம் டிரா:

இந்திய பி மற்றும் சி அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய சி அணி 525/10 ரன்களையும், பி அணி 332/10 ரன்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் சி அணி 128/4 ரன்களை எடுத்தது. 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய சி அணி பௌலா் அன்ஷுல் காம்போஜ் ஆட்ட நாயகனாக தோ்வு பெற்றாா்.