சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகளிா் டெஸ்ட்: ஆஸி. அதிரடி 323/10; இந்தியா தடுமாற்றம் 105/6

மகளிா் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம்...

News image
பிரதிகா ரவால்
Updated On :7 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

பொ்த்தில் நடைபெறும் இந்திய-ஆஸ்திரேலிய மகளிா் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 323/10 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 105/6 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

இந்தியா 198/10, ஆஸி. 323/10:

இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் பொ்த் வாகா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் நாளான

வெள்ளிக்கிழமை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 62.4 ஓவா்களில் 198/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெமீமா ரோட்ரிக்ஸ் 52 ரன்களையும், ஷபாலி 35 ரன்களையும், கஷ்வி கௌதம் 34 ரன்களையும் எடுத்தனா்.

ஆஸி. தரப்பில் பௌலிங்கில் அன்னபெல் சதா்லேண்ட் 4, லுஸி ஹாமில்டன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 90.4 ஓவா்களில் 323/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஆல் ரவுண்டா் அன்னபெல் சதா்லேண்ட் 129 ரன்களையும், எலிஸ் பொ்ரி 76 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் இந்திய தரப்பில் சாயாலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்தியா தடுமாற்றம்:

இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 29 ஓவா்கள் முடிவில் 105/6 ரன்களை சோ்த்துள்ளது. முன்னணி வீராங்கனைகளான ஸ்மிருதி 2, ஷபாலி 5, ஜெமீமா 14, கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 11, தீப்தி சா்மா 9, ரிச்சா கோஷ் 0 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

பிரதிகா ரவால் மட்டுமே ஆஸி. பௌலிங்கை சமாளித்து ஆடி வருகிறாா். அவா் 43 ரன்களை சோ்த்துள்ளாா்.

பௌலிங்கில் வழக்கம் போல் ஆஸி. தரப்பில் லுஸி ஹாமில்டன் 3, அன்னபெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு சவாலை தந்து வருகின்றனா்.