டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி; பந்துவீச்சாளர்களுக்கு ரோஹித் சர்மா புகழாரம்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
- படம் | AP
Updated On :22 செப்டம்பர் 2024, 3:50 pm

DIN

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட்டில் வெற்றி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பந்துவீச்சாளர்களுக்கு புகழாரம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதற்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை கேப்டன் ரோஹித் சர்மா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவில் விளையாடினாலும் வெளிநாடுகளில் விளையாடினாலும் நாங்கள் பந்துவீச்சில் வலுவாக இருக்க வேண்டும். சூழ்நிலை எப்படி இருந்தாலும் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விளையாடினாலும் சரி, வெளிநாடுகளில் விளையாடினாலும் சரி, வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பந்துவீச்சாளர்களை பாராட்டியாக வேண்டும். இந்திய அணிக்கு வெற்றி தேவை என்ற சுழலில் அவர்கள் பொறுப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத்தர தவறியதில்லை.

செம்மண் ஆடுகளம் வித்தியாசமானதாக இருக்கும். அதனை புரிந்துகொண்டு விளையாட பொறுமை என்பது அவசியம். இதுபோன்ற ஆடுகளங்களில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே பொறுமை என்பது தேவை. பேட்டிங்கில் சரியான இடங்களில் பந்தினை அடித்து ரன்கள் எடுத்தோம். அதேபோல பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம் என்றார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.