எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!

ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களை தக்கவைப்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 4:49 pm IST

ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களை தக்கவைப்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் உரிமையாளர்களுடன் கடந்த ஜூலையில் பிசிசிஐ தலைமையகத்தில் ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.

இதனையடுத்து, தற்போது ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்கவைப்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். தக்கவைத்துக் கொள்வது அல்லது ரைட் டு மேட்ச் என்ற முறைப்படி 6 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக்கொள்ள முடியும்.

2. வீரர்களை தக்கவைப்பது மற்றும் ரைட் டு மேட்ச் முறைப்படி வீரர்களை அணியில் தக்கவைத்துக் கொள்ளும் விஷயங்களில் அணிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். தக்கவைக்கப்படும் 6 வீரர்களில், ஒரு அணி அதிகபட்சமாக சர்வதேச அணிகளில் விளையாடிய 5 வீரர்களை (இந்திய வீரர் & வெளிநாட்டு வீரர்) அணியில் தக்கவைத்துக் கொள்ளலாம். அதேபோல, தேசிய அணிக்காக விளையாடாத (அன்கேப்டு பிளேயர்) 2 வீரர்களை ஒரு அணி அதிகபட்சமாக தக்கவைத்துக் கொள்ளலாம்.

3. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான ஏலத்துக்கு ஒரு அணிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

4. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போட்டிக்கான சம்பளம் என்பது கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் அணியில் விளையாடும் வீரர் (இம்பாக்ட் பிளேயர் உள்பட) ஒவ்வொருவருக்கும் போட்டி ஒன்றுக்கு ரூ.7.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அவருக்கு ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் தொகை அல்லாது இந்த தொகை கூடுதலாக வழங்கப்படும்.

5. ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயரை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்தடுத்து நடைபெறும் ஐபிஎல் ஏலங்களில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்துவிடுவர்.

6. ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுத்துக் கொள்ள தங்களது பெயரை பதிவு செய்த வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, தொடர் தொடங்குவதற்கு முன்பு தன்னால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது எனக் கூறினால், அவர் அந்த தொடரிலிருந்து தடை செய்யப்படுவார். அடுத்த இரண்டு சீசனின் வீரர்கள் ஏலத்திலும் கலந்துகொள்ள முடியாது.

7. சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஒருவர் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடவில்லையென்றால், அவர் புதிய வீரராக (அன்கேப்டு பிளேயர்) கருதப்படுவார். அதேபோல ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக 5 ஆண்டுகளாக பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறாத வீரரும் புதிய வீரராகவே (அன்கேப்டு பிளேயர்) பார்க்கப்படுவார். இந்த விதிமுறை இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

8. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.