ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.

News image

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - படம் | AP

Updated On :6 ஏப்ரல் 2025, 12:32 pm

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக அண்மையில் தெரிவித்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வாசிம் ஜாஃபர் கூறியதென்ன?

உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக ஜெய்ஸ்வால் எடுத்துள்ள முடிவு ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாஃபர் (கோப்புப் படம்)

வாசிம் ஜாஃபர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கோவா அணியில் எந்த பொறுப்பு அளிக்க முன்வந்தாலும், மும்பை அணியை விட்டு ஜெய்ஸ்வால் விலகக் கூடாது. அதுவும் குறிப்பாக, இந்த இளம் வயதில் (23 வயது) அவர் அணியை விட்டு விலகுவது சரியான முடிவு கிடையாது. 34-35 வயதில் ஒருவர் இந்த முடிவை எடுத்தால் அதில் பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை. மும்பை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறேன். ஆனால், மும்பை அணியை விட்டு விலகுவது என்ற அவரது முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

மும்பை அணிக்காக 14 வயதுக்கு முன்பிலிருந்து தற்போது வரை விளையாடியுள்ள ஒருவர் இந்த முடிவை எடுத்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. மிக விரைவில் இந்த முடிவை அவர் எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். அவர் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதை இலக்காக வைத்துக்கொள்ளக் கூடாது. இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே அவருடைய இலக்காக இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.