பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர்!

ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன.

படம் | ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :

ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 20 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் வருகிற ஜூன் 15 ஆம் தேதி ஸ்காட்லாந்து அணி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

இது தொடர்பாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. இந்த தொடரின் ஒளிபரப்பு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அடுத்த மாதத்தில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான தகுதிச் சுற்றுக்கு தயாராவதற்கு இந்த முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்துக்கு உதவியாக இருக்கும். டி20 உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று ஜூலை 5-11 வரை நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.