இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதன் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்து இலங்கையை 137 ரன்களுக்கு சுருட்டியது.
இந்தியா சார்பில் ஸ்நேஹ ராணா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இந்திய மகளிரணி 29.4 ஓவர்களில் 149/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பிரதிகா ராவல் 50*, ஸ்மிருதி மந்தனா 43, ஹர்லீன் தியோல் 48* ரன்களும் எடுத்தார்கள்.
பிரதிகா ராவல் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ஏப்.29ஆம் தேதி எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடுகின்றன. அதில் டாப் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றிபெறும் அணியே முத்தரப்பு தொடரில் வென்றதாக அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவியேற்பு!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


