
உதவி காவல் ஆணையராக பதவியேற்ற இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ்!
மேற்கு வங்க மாநிலத்தில் ஏசிபியாக பதவியேற்ற கிரிக்கெட் வீராங்கனை குறித்து...

உதவி காவல் ஆணையராக பதவியேற்ற இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ். - படம்: எக்ஸ் / மேற்கு வங்க காவல்துறை.
கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் மேற்கு வங்க மாநிலத்தில் ஏசிபியாக பதவியேற்றார்.
இந்திய மகளிரணி முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சமீபத்தில் வரலாறு படைத்தது.
இந்த அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீராங்கனைக்கும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் பரிசுத் தொகையை அறிவித்தார்கள்.

ரிச்சா கோஷ் - படம்: பிசிசிஐ
இதன்படி இந்திய மகளிரணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி டிஎஸ்பி பட்டத்தை வழங்கினார். இதனுடன் ரூ.34 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அவர் ஏசிபி (உதவி காவல் ஆணையர்) ஆக பதவி ஏற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிலுகுரி எனுமிடத்தில் ஏசிபியாக பதவி ஏற்றுள்ளதாக மேற்கு வங்க காவல்துறை விடியோ வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
Summary
Richa Ghosh, a crucial member of the Indian team that won the Women's Cricket World Cup, joined the State Police today in the rank of DSP (Deputy Superintendent of Police).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





