மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வன்மம் தவிர்ப்போம்..! எம்.எஸ். தோனியின் அறிவுரை!

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி ரசிகர்களுக்கு அழகான அறிவுரையைக் கூறியுள்ளார்.

News image

எம்.எஸ்.தோனி - பிடிஐ

Updated On :21 பிப்ரவரி 2025, 5:53 am

சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி ரசிகர்களுக்கு அழகான அறிவுரையைக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

தோனி, சஞ்சு சாம்சன்.

தோனி, சஞ்சு சாம்சன். - படம்: பிடிஐ

அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் தோனி இன்னும் சில ஆண்டுகள் சிஎஸ்கேவில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்தார்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க சில அறிவுரைகளையும் தோனி தனது ரசிகர்களுக்காகக் கூறினார்.

தோனி பேசியதாவது:

மன்னிக்க பழகுங்கள். நம்மில் பலருக்கும் இந்தப் பழக்கம் இல்லை. நாம் வாழ்க்கையில் மிகுந்த பழிவாங்குபவர்களாக மாறியுள்ளோம். யாராவது ஒன்று சொன்னால் நாம் அதற்கு இன்னொன்று சொல்லுகிறோம். அதை விடுத்து அவர்களை மன்னியுங்கள், கடந்து சென்று வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சண்டையிட்டுக் கொள்வது கவனிக்கத்தக்கது.

கடந்தாண்டு ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை அவமரியாதையாக நடத்தியதிற்கு இந்தாண்டு பழிவாங்க வேண்டுமென பல சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.