சூப்பர்ஸ்டார் கலாசாரம் இந்திய அணியை முன்னேற்றாது: ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் சூப்பர் கலாசாரம் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா.
விராட் கோலி, ரோஹித் சர்மா. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இந்திய அணியில் சூப்பர் கலாசாரம் ஒழிய வேண்டுமென முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என அணி இந்திய மோசமாக தோல்வியுற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மிக மோசமாக விளையாடினார்கள்.

விராட் கோலி 9 இன்னிங்ஸ்களில் 190 ரன்களும் ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸ்களில் 31 ரன்களும் எடுத்துள்ளார்.

பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் இவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சூப்பர்ஸ்டார் கலாசாரம் குறித்து கூறியதாவது:

சூப்பர்ஸ்டார்கள் தேவையில்லை

சூப்பர்ஸ்டார் கலாசாரம் உருவாகிவருகிறது. நமக்கு சூப்பர்ஸ்டார்கள் தேவையில்லை, நமக்கு தேவை சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்கள் இருந்தால்தான் அணி முன்னேறும்.

சூப்பர்ஸ்டார் ஆக நினைப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்தே கிரிக்கெட் விளையாடிக்கொள்ளவும். இந்திய அணிக்கு வரவேண்டாம்.

அடுத்தாக இங்கிலாந்து தொடர் வரவிருக்கிறது. இங்கிலாந்து தொடரில் யார் இருப்பார்கள், என்ன நடக்குமென அனைவரும் பேசுகிறார்கள். என்னைப் பொருத்தவரை யார் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்களே செல்ல வேண்டும்.

ஒருவரின் மதிப்பை வைத்து தேர்வு செய்ய முடியாது. அப்படி செய்தால் கபில் தேவ், சுனில் கவாஸ்கரையும் அழைத்து செல்லுங்கள். சூப்பர்ஸ்டார் கலாசாரம் இந்திய அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லாது.

சூப்பர்ஸ்டார் கலாசாரம் அணியை முன்னேற்றாது

விராட் கோலி, ரோஹித் சர்மா என யாராக இருந்தாலும் அவர்களது செயல்பாடுகளை வைத்து தேர்வு செய்யுங்கள். விளையாட்டைவிட யார் ஒருவரும் பெரியவர்கள் கிடையாது. அவர்களது மனதில் தங்களைப் பெரிய சூப்பர்ஸ்டாராக நினைத்தாலும் பரவாயில்லை. இந்திய அணியை முன்னோக்கி கொண்டுசெல்ல இதை செய்தாக வேண்டும்.

நான் அவர்களை கழட்டிவிட சொல்லவில்லை. இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர்களை கவுண்டி கிரிக்கெட் அல்லது வேறு எதாவது உள்ளூர் போட்டிகளில் முதல்தர கிரிக்கெட் விளையாட வேண்டும்.

இது தேர்வுக்குழுவுக்கு சவாலாக இருந்தாலும் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.

யாருக்கு எவ்வளவு வாய்ப்பு கிடைக்கிறது. அதில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அணியில் எடுப்பதும் உட்காரவைப்பதும் நடக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அதிக திறமைசாலிகள் இருக்கிறார்கள்.

விராட் கோலியின் எண்கள் கவலையளிக்கிறது. எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு இளைஞருக்கு வாய்ப்பு தந்தாலும் அவரும் கோலியின் சாதனைகளை நிகழ்த்துவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com