ஆஸ்திரேலிய இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக நீடிப்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் நாதன் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கான்ஸ்டாஸ். அறிமுகப் போட்டியில் அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த அவர், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 113 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரராக நீடிப்பது கடினம்
டெஸ்ட் போட்டிகளில் சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டுமென்றால், அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது எனவும், எப்போதும் அதிரடியாக விளையாடுவதை மட்டும் தொடர விரும்பினால் அவரால் தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் - படம் | ஐசிசி
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: எல்லா முறையும் சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைத்தால், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாது என நினைக்கிறேன். அதனால், முதல் இரண்டு போட்டிகளில் விளையாடியதிலிருந்து அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார்.
நிறைய இளம் வீரர்களை பார்த்துள்ளேன். அவர்கள் அணிக்குள் வரும்போது, அனைத்து விஷயங்களிலும் சிறிது அதீத ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் யார் என்பதையும், சர்வதேச அரங்கில் எந்த மாதிரியான வீரராக உருவாக விரும்புகிறார்கள் என்பது குறித்தும் சில போட்டிகளில் விளையாடிய பிறகே, அவர்கள் கவனம் கொடுக்கத் தொடங்குவார்கள் என்றார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

”சாதி பாகுபாடு காட்டினால், அரசுப் பணியில் நீடிக்க முடியாது!” வன்னி அரசு! | VCK

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



