மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்கிறதா என்பது தொடர்பாக...

News image

ஆப்கானிஸ்தான் வீரர்கள் - படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :9 ஜனவரி 2025, 12:43 pm

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி வலியுறுத்தியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.

புறக்கணிக்க வலியுறுத்தல்

அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு பெண்களுக்கான விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த நாட்டின் மகளிர் கிரிக்கெட் அணியையும் தலிபான் அரசு கலைத்துவிட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி தெரிவித்துள்ளதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கில்லை. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாடாது எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

முன்னதாக, பிரிட்டனைச் சேர்ந்த 160-க்கும் அதிகமான அரசியல்வாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கக் கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.