இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஆதரவாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார்.
கம்பீர் தலைமையில் பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-3 என மோசமாக தோல்வியுற்றது. சொந்த மண்ணில் இந்தியா 0-3 என நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “தனியாளாக ஒட்டுமொத்த அணியின் உழைப்புக்கான பெயரை பிஆர் மூலமாக கம்பீர் பெற்றார்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
தற்போது இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கம்பீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹர்சித் ராணா கூறியதாவது:
தனிப்பட்ட பாதுகாப்பின்மையினால் ஒருவரை விமர்சிப்பது நல்லதல்ல. கௌதம் கம்பீர் தன்னைவிட மற்றவர்களின் நலனை நினைப்பவர்களில் ஒருவர்.
ஒருவரின் மோசமான நாள்களில் வீரர்களை நம்புகிறவராகவும் வீரர்களை புகழ் வெளிச்சத்தில் நிறுத்துபவராகவும் இருப்பவர் கம்பீர். அதை அவர் பலமுறை செய்திருக்கிறார். ஆட்டத்தை எங்கள் பக்கம் எப்படி திருப்புவது என்ற அறிவுடையவர் கம்பீர் எனக் கூறியுள்ளார்.

கம்பீருக்கு ஆதரவாக பதிவிட்ட ஹர்சித் ராணா. - படம்: இன்ஸ்டா / ஹர்சித் ராணா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தை அடித்தளத்திலிருந்து உருவாக்க வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு

பிங்க் பந்து ஆட்டத்துக்கு கௌதம் கம்பீர் ஆதரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



