ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ரஞ்சி கோப்பையில் விராட் கோலி; பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

ரஞ்சி கோப்பை போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளதால் மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News image

விராட் கோலி (கோப்புப் படம்)

Updated On :27 ஜனவரி 2025, 4:22 pm

ரஞ்சி கோப்பை போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளதால் மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிசிசிஐ-ன் புதிய வழிகாட்டுதலின் படி, அவர் ரஞ்சி போட்டியில் தில்லி அணிக்காக களமிறங்கவுள்ளார்.

அவர் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரஞ்சி போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவிருக்கிறார். இந்தப் போட்டிக்கான பயிற்சியை நாளை தில்லி அணி வீரர்களுடன் விராட் கோலி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுவதால், தில்லி அருண் ஜெட்லி மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லி கிரிக்கெட் சங்க செயலர் அசோக் சர்மா கூறியதாவது: இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலியுடன் இணைந்து விளையாடவுள்ளது இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும். தில்லி அணியில் உள்ள வீரர்களில் நவ்தீப் சைனியை தவிர்த்து, மற்ற வீரர்கள் யாரும் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது கிடையாது. தில்லி அணி வீரர்கள் விராட் கோலியைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்வார்கள்.

ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விராட் கோலி விளையாடவுள்ளதால், இந்த போட்டிக்கான மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. சாதாரணமாக ரஞ்சி போட்டிக்கு 10 அல்லது 12 பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுவர். ஆனால், விராட் கோலி பயிற்சி மேற்கொள்ள இருப்பதால், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். அதன் மூலம், விராட் கோலி எந்த ஒரு தொந்தரவுமின்றி பயிற்சி மேற்கொள்ளலாம்.

பொதுவாக ரஞ்சி போட்டிகளை ரசிகர்கள் இலவசமாக நேரில் பார்க்கலாம். அவர்களுக்காக ஒரு கேலரி திறந்துவிடப்படும். ஆனால், விராட் கோலி விளையாடுவதால் இந்த போட்டிக்கு 3 கேலரிகள் திறந்துவிடப்படவுள்ளன. மேலும், ரசிகர்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட உள்ளன என்றார்.

தில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டி ஜனவரி 30 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.