தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

News image

கருண் நாயர் - படம் | AP

Updated On :17 ஜூலை 2025, 4:19 pm IST

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் கருண் நாயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். இந்த போட்டிகளில் அவருக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான தீப் தாஸ்குப்தா பேசியதாவது: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்ஷனை மீண்டும் சேர்க்கும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றிக்கு மிக அருகில் சென்று இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இருந்தது.

இந்த போட்டியில் நான் 3-வது வீரராக களமிறங்கும் கருண் நாயரை கவனித்தேன். இளம் வீரரான சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பளிக்காமல் தொடர்ச்சியாக கருண் நாயருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்ஷன் நன்றாக விளையாடினார். அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23 முதல் மான்செஸ்டரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

It is said that Karun Nair's time is up and he is unlikely to be included in the playing eleven for the next match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.