ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா..! 4-ஆவது இந்தியராக சாதனை!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா குறித்து...

News image

அபிஷேக் சர்மா - படம்: பிசிசிஐ

Updated On :30 ஜூலை 2025, 5:26 pm IST

ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வயது) இந்திய டி20 அணியில் 2024இல் அறிமுகமானார்.

இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் 535 ரன்கள் எடுத்துள்ளார்.

இவரது பேட்டிங் சராசரி 33.43ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 193.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.

பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பிறகு, எப்படி முதலிடம் பிடித்தார் தெரியுமா? டிராவிஸ் ஹெட் புள்ளிகள் குறைந்ததால் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை

1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள் (இந்தியா)

2. டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகள் (ஆஸி.)

3. திலக் வர்மா - 804 புள்ளிகள் (இந்தியா)

4. பிலிப் சால்ட் - 791 புள்ளிகள் (இங்கிலாந்து)

5. ஜாஸ் பட்லர் - 772 புள்ளிகள் (இங்கிலாந்து)

Summary

Congratulations to Abhishek Sharma, who becomes the Number One batter in ICC Men's T20I rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.