
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
சதம் விளாசிய கீஸி கார்ட்டி
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.4 அணி ஓவர்களில் 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கீஸி கார்ட்டி சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பிரண்டன் கிங் (59 ரன்கள்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (22 ரன்கள்) எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாக்யூப் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ், ஜேக்கோப் பெத்தேல் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.