
ஐபிஎல்லில் கோப்பையை வென்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகள்! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனின் பரபரப்பான முடிவு. விராட் கோலியின் நீண்டகால கனவு தற்போது நனைவாயிருக்கிறது. இன்றைய இரவுக்கான கிரீடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சென்னை அணி அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.