சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

கோலி, ஸ்மித், ஏபிடி குறித்து சாம் கான்ஸ்டாஸ் கூறியதென்ன?

விராட் கோலி குறித்து ஆஸி. வீரர் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது...

News image

சாம் கான்ஸ்டாஸ் - படம் |ஏபி

Updated On :24 ஜூன் 2025, 7:07 pm IST

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியை தனது முன்மாதிரி எனக் குறிப்பிட்டுள்ளார்.

பார்டர் கவாஸ்கர் தொடரில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா ஓவரில் அதிரடியாக ஆடி உலக கிரிக்கெட்டில் புகழ்பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் 60, இரண்டாவது இன்ன்ங்ஸில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 23,22 என ஆட்டமிழந்தார்.

தற்போது, 3-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் களமிறங்கவிருக்கிறார். நாளை இந்தத் தொடர் தொடங்குகிறது.

விராட் கோலி சாம் கான்ஸ்டாஸை மோதியதால் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை கோலி சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய நேர்காணலில் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது:

ஏபிடி வில்லியர்ஸ் - அவர் அதிரடியாக ஆடுவது பிடிக்கும். 360 டிகிரியிலும் அடித்து ஆட்டத்தை எடுத்துச் செல்வார்.

ஸ்டீவ் ஸ்மித் - என்னைப் பொறுத்தவரை ஸ்மித் உலகத்திலேயே தலைசிறந்த வீரர். அவருடன் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம்.

விராட் கோலி - கோலியின் மணிக்கட்டு அபாரமானது. வலதுபுறம் அவர் ஆடும் விதம் பிடிக்கும். அவர் விளையாடுவதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். மிகப்பெரிய முன்னுதாரணம்.

ஜாஸ் பட்லர் - அவரது சில விடியோக்களை பார்த்திருக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.