இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களது அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸுடன் இணைந்த சஞ்சு சாம்சன்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, கை விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பின், அவருக்கு கை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: விமான நிலையத்திலிருந்து நேராக அணியின் முதல் பயிற்சி ஆட்டத்துக்காக சஞ்சு சாம்சன் மைதானத்துக்கு வந்து, அவர் எப்போதும் புன்னகையுடன் இருப்பதைப் போன்று அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவைத்துள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மார்ச் 23 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் சாம் கரண் விளையாடாதது ஏன்? ஏமாற்றத்தின் உச்சத்தில் சங்ககாரா!

சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: குஜராத் அணிக்கு 215 ரன்கள் இலக்கு

குவாலிஃபையர் 2: டாஸ் சுண்டியதில் சர்ச்சை; ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!

சூர்யவன்ஷி மிகவும் இயற்கையான சிறுவன்..! இலங்கை கேப்டன் புகழாரம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



