எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து மொயின் அலி பேசியுள்ளார்.

News image
மொயின் அலி- படம் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :17 மார்ச் 2025, 4:15 pm

DIN

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

அனைத்து அணிகளின் வீரர்களும் அவர்களது அணியின் பயிற்சி முகாமில் இணைந்து ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதா?

ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது கடுமையான முடிவு கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானது கிடையாது. பிசிசிஐ-ன் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஐபிஎல் தொடரிலிருந்து நிறைய பேர் விலகியுள்ளனர். கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. அதன் பின், அவர்கள் மீண்டும் அணியில் நல்ல தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடியுள்ளனர்.

ஐபிஎல் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளது தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சற்று பின்னடைவைக் கொடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் போன்ற வீரர் ஒருவர் அணியிலிருந்து விலகினால், எந்த அணிக்கும் அது பின்னடைவாகவே இருக்கும். ஹாரி ப்ரூக்கை மறந்துவிட்டு ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். காயம் அல்லது தனிப்பட்ட குடும்ப காரணங்களின்றி ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால் தடை விதிக்கப்படும் என்ற விதி இருக்கிறது.

காயம் ஏற்பட்டு விலகியிருந்தால் அது வேறு. ஆனால், சாதாரணமான சூழலில் திடீரென அணியிலிருந்து வெளியேறினால், சம்பந்தப்பட்ட வீரர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதாக தெரியவில்லை என்றார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகிய ஹாரி ப்ரூக், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.