சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து மொயின் அலி பேசியுள்ளார்.

News image

மொயின் அலி - படம் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :17 மார்ச் 2025, 9:45 pm IST

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

அனைத்து அணிகளின் வீரர்களும் அவர்களது அணியின் பயிற்சி முகாமில் இணைந்து ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதா?

ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது கடுமையான முடிவு கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானது கிடையாது. பிசிசிஐ-ன் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஐபிஎல் தொடரிலிருந்து நிறைய பேர் விலகியுள்ளனர். கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. அதன் பின், அவர்கள் மீண்டும் அணியில் நல்ல தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடியுள்ளனர்.

ஐபிஎல் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளது தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சற்று பின்னடைவைக் கொடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் போன்ற வீரர் ஒருவர் அணியிலிருந்து விலகினால், எந்த அணிக்கும் அது பின்னடைவாகவே இருக்கும். ஹாரி ப்ரூக்கை மறந்துவிட்டு ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். காயம் அல்லது தனிப்பட்ட குடும்ப காரணங்களின்றி ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால் தடை விதிக்கப்படும் என்ற விதி இருக்கிறது.

காயம் ஏற்பட்டு விலகியிருந்தால் அது வேறு. ஆனால், சாதாரணமான சூழலில் திடீரென அணியிலிருந்து வெளியேறினால், சம்பந்தப்பட்ட வீரர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதாக தெரியவில்லை என்றார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகிய ஹாரி ப்ரூக், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.