சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது எளிதான விஷயமாக இருக்காது என இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் அகர்கர் கூறுவதென்ன?
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் அணியின் கேப்டனாக செயல்படுவது அவ்வளவு எளிதான விஷயமாக இருக்கப் போவதில்லை என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடிமனான அனுபவமாக இருக்கலாம் அல்லது உண்மையில் சிறந்த தொடராக அமையலாம். இந்த தொடர் கடினமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. அனுபவங்களே இந்திய அணியை முன்னோக்கி நகரச் செய்யும்.
தற்போது, ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு கண்டிப்பாக கடினமாக இருக்கப் போகிறது. சர்வதேசப் போட்டிகளில் அதிக சவால்கள் நிறைந்திருக்கும். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தை சந்தித்து வருகிறது. மூத்த வீரர்களில் இருவர் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். அதனால், கேப்டன் பொறுப்பு மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது.
ஷுப்மன் கில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் மிகச் சிறந்த வீரர். எங்கள் அனைவருக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. கேப்டனை ஓரிரு மணி நேரங்களில் அவர்களது செயல்பாட்டினை வைத்து தேர்வு செய்துவிட முடியாது. கேப்டனாக நியமிக்கப்பட உள்ளவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கவனித்தே அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படுகிறது.
ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதை சரியான முடிவாக கருதுகிறோம். கடந்த ஆண்டில் அவரது விளையாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் நாங்கள் கவனித்தோம். அவரிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் சதம்; வலுவான நிலையில் இந்திய அணி!
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna



