பாகிஸ்தான் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி நாடு திரும்ப இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி தெரிவித்திருப்பதால் வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அடுத்ததாக 2, 3-ஆவது ஒருநாள் போட்டிகள் முறையே நவ.13, நவ.15 ஆம் தேதிகளில் விளையாடுகிறது. அனைத்துப் போட்டிகளும் ராவல்பிண்டி திடலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ராவல்பிண்டி அருகேவுள்ள இஸ்லாமாபாத்தில் நவ. 11 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணமாக 8 வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளை ரத்து செய்துவிட்டு, இலங்கை வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டிகளை ரத்து செய்துவிட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருப்பது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசு முழுப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்திருப்பதாகவும், முடிவை மீறி வீரர்கள் நாடு திரும்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summary
Pakistan blast: Players demand to return home; Sri Lankan board warns!
இதையும் படிக்க : இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்: கேசவ் மகாராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?

வீரா்களுக்கு அபராதம் விதிக்க பாகிஸ்தான் வாரியம் பரிசீலனை!

திட்டமிட்ட தப்பாட்டம்!

இந்திய உரிமையாளர்களின் அணிகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடமில்லையா?
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


