ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

15 சிக்ஸர்கள் விளாசல்; 2-வது அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

News image
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி- படம் | பிசிசிஐ
Updated On :14 நவம்பர் 2025, 3:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா ஏ அணியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த்துடன் சூர்யவன்ஷி பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிமாசலுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 32 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். அந்த சாதனையை தற்போது சூர்யவன்ஷி சமன் செய்துள்ளார்.

அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் மழைப் பொழிந்தார். அவர் 42 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜித்தேஷ் சர்மா 32 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் குஜராத்தின் உர்வில் படேல் இருவரும் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் சையது முஸ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளனர்.

கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

summary

Vaibhav Suryavanshi has become the second Indian to score the fastest century in T20Is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.