அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட்டில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் பால் ஸ்டிரிலிங் அதிகபட்சமாக 60 ரன்களும், கேட் கார்மைக்கேல் 59 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், ஹாசன் முரட், ஹாசன் மஹ்முத் மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் 587 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் மஹ்முதுல் ஹாசன் ஜாய் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ இருவரும் சதம் விளாசி அசத்தினர். மஹ்முதுல் ஹாசன் ஜாய் 171 ரன்களும், ஷாண்டோ 100 ரன்களும் எடுத்தனர். மோமினுல் ஹேக் 82 ரன்களும், ஷாத்மன் இஸ்லாம் 80 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்பிரிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வங்கதேசத்தைக் காட்டிலும் 301 ரன்கள் பின் தங்கிய நிலையில், அயர்லாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், வங்கதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணியில் ஆண்டி மெக்பிரின் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பால் ஸ்டிரிலிங் 43 ரன்களும், ஆண்ட்ரூ பல்பிர்னி 38 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹாசன் முரத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தைஜுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளையும், நஹித் ராணா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
Bangladesh won the first Test against Ireland by an innings and 47 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!

ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



