ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
- படம் | AP
Updated On :16 நவம்பர் 2025, 2:13 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (நவம்பர் 16) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 45.2 ஒவர்களில் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்கிரம 48 ரன்களும், கேப்டன் குஷல் மெண்டிஸ் 34 ரன்களும் எடுத்தனர். பவன் ரத்நாயகே 32 ரன்கள், கமில் மிஷாரா 29 ரன்கள், பதும் நிசங்கா 24 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஃபைசல் அக்ரம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஃபாஹீம் அஷரஃப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே 2-0 என கைப்பற்றிவிட்ட நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Batting first, Sri Lanka were bowled out for 211 runs in the third ODI against Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.