திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரிங்கு சிங்கிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்! தாவூத் இப்ராஹிம் கும்பலை சேர்ந்த இருவர் கைது!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடமிருந்து ரூ.5 கோடி கேட்டு பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளதைப் பற்றி...

News image

ரிங்கு சிங் - (கோப்புப் படம்)

Updated On :9 அக்டோபர் 2025, 5:36 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடமிருந்து ரூ.5 கோடி கேட்டு பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், கொல்கத்தா அணி வீரருமான ரிங்கு சிங், இந்திய டி20 அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இவர் ஐபிஎல் தொடரில் 2023 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக ரூ.55 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடி வந்தார். பின்னர், குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அதன் தொடர்ச்சியாக உலகப் பிரபலமான ரிங்கு, கடந்தாண்டு மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.13 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். மேலும், இந்திய டி20 அணிக்கு ஆசியக் கோப்பையில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்திருந்தார்.

இவருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரிங்கு சிங்குவை பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பல் ரூ.5 கோடி கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் மிரட்டல் விடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் முகமது தில்ஷாத், முகமது நவீத் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலால் கொல்லப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கின் மகன் மகன் ஜீஷான் சித்திக்கிடமும் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது.

அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நவீத் மற்றும் தில்ஷாத் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Summary

Asia Cup winner Rinku Singh receives Rs 5 crore ransom threat from Dawood Ibrahim’s gang, two accused arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.