மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (அக். 22) மோதுகின்றன.
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியது முதல், இதுவரை தோல்வியே சந்திக்காமல் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில், வெற்றி பெறும் அணியானது தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலிசா ஹீலிக்கு ஏற்பட்டுள்ள காயத்தால், இன்றைய போட்டிக்கு தஹ்லியா மெக்ராத் தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Australia won the toss and elected to field against England in the Women's ODI World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










