பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு 245 ரன்கள் இலக்கு...

News image

மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 245 ரன்கள் இலக்கு - படம் - ஏபி

Updated On :22 அக்டோபர் 2025, 7:13 pm IST

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இந்தூரில், இன்று (அக். 22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்துள்ளது.

அதிகப்படியாக, இங்கிலாந்து அணிக்காக வீராங்கனைகள் டாமி பியூமாண்ட் 78 ரன்கள், ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

முன்னதாக, உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியது முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியே சந்திக்காமல், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Australia has been set a target of 245 runs against England in the Women's ODI World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.