விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 49 ஓவர்களில் 340 ரன்களை குவித்துள்ளது...

News image
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 341 ரன்கள் இலக்கு...- படம் - ஏபி
Updated On :23 அக்டோபர் 2025, 2:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. நவி மும்பையில் இன்று (அக். 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரத்திகா ராவல் கூட்டணி, 201 பந்துகளில் 212 ரன்களை குவித்தது.

இதில், பிரத்திகா ராவல் 134 பந்துகளில் 122 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 109 ரன்களையும் எடுத்து அசத்தினர். மேலும், வீராங்கனை ஜெர்மிமா ரோட்ரிக்ஸ் 55 பந்துகளில் 76 ரன்களை எடுத்துள்ளார். ஆனால், திடீரென மழை பெய்ததால் ஆட்டம் 48 ஓவர்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், மழை நின்றதும் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய அணி 49 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 340 ரன்களை எடுத்து அசத்தியுள்ளது.

ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுமார் 1.5 மணிநேரம் போட்டி தாமதமாகியுள்ளது. இதனால், ஆட்டம் 44 ஓவர்களாகவும், நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இலக்கு, 325 ரன்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 4 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, அரை இறுதிக்குச் செல்ல இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

New Zealand have been set a target of 341 runs against India in the Women's ODI World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.