மழை குறுக்கீடு, டிஎல்எஸ் விதி: 14 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் வென்ற தெ.ஆ. குறித்து...
south africa mens t20 team
தென்னாப்பிரிக்க அணியினர்.படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்.
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் தென்னாப்பிரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழையினால் பாதிக்கப்பட்ட போட்டி டிஎல்எஸ் விதியின்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.

டி20 தொடரில் முதல் போட்டியில் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி 7.5 ஓவரில் 97/5 ரன்கள் குவிக்க மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதிரடியாக ஆடிய மார்க்ரம் 28, பிரெவிஸ் 23, டோனவன் ஃபெரேரா 28 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து 5 ஓவர்களில் 69 ரன்கள் தேவை என விளையாடிய இங்கிலாந்து 54 ரன்கள் மட்டுமே எடுக்க, 14 ரன்கள் வித்தியாசத்தில் தெ,ஆ, வென்றது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்தார்.

11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த டோனவன் ஃபெரேரா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

Summary

South Africa won a rain-shortened first Twenty20 international by 14 runs after England failed to chase down a revised target of 69 off five overs in Cardiff.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com