
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் அணியும் தேர்வாகியுள்ளன.
குரூப் பி பிரிவில் நேற்றிரவு நடந்த போட்டியில், இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆப்கன் வீரர்கள், ரசிகர்கள் சோகத்துடன் வெளியேறினார்கள்.
இவர்கள் வெளியேற்றத்தினால், வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தனித்தனியாக மற்ற அணிகளுடன் மோதும். இந்த ஆறு போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் இருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவர்.
இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்.21ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.