இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு சூழலிலும் சிறப்பாக செயல்படக் கூடிய நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் 6-லிருந்து 8 மீட்டர் வரையிலான லென்த், பந்துவீச்சில் வேலை செய்கிறது. ஆனால், எங்களது அணியில் வித்தியாசமாக பந்துவீசக் கூடிய நான்கு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் போன்ற தனித்திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஜேடன் சீல்ஸ் இரண்டு விதமாகவும் பந்தினை ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர். உயரமாக இருக்கும் அல்சாரி ஜோசப் சிறப்பாக பௌன்சர்களை வீசி எதிரணிக்கு சவாலளிப்பார்.
இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் திறன் இருக்க வேண்டும். இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் மட்டுமே அவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவர்களிடமிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி ஊக்கம் எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம் என்றார்.
Summary
The West Indies team coach has said that they have quality fast bowlers who can take 20 wickets on Indian soil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

செய்திகள் சில வரிகளில்...

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

குஜராத் டைட்டன்ஸின் தோல்விக்கு காரணம் இதுதான்; பயிற்சியாளர் கூறியதென்ன?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



