சூப்பர் 4 சுற்று: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்படம் | இலங்கை கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்கிறது.

சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவின. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றில் வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இரண்டு அணிகளும் களம் காண்கின்றன.

Summary

Pakistan won the toss and elected to bowl against Sri Lanka in the Super 4 round of the Asia Cup cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com