நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.

News image

பாகிஸ்தான் அணி வீரர்கள் - படம் | AP

Updated On :26 செப்டம்பர் 2025, 6:27 pm IST

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று (செப்டம்பர் 26) விளையாடுகின்றன. துபையில் நாளை மறுநாள் (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் ஒரு முறையும், சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும் மோதிக் கொண்டன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்த சூழலில், இரண்டு அணிகளும் மீண்டும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. மேலும், 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தாலும், இரண்டு அணிகளுக்கும் இடையேயான சர்ச்சைகளும் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பதே பாகிஸ்தான் வீரர்களுக்கு என்னுடைய அறிவுரையாக இருக்கும். அதற்காகவே, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். வெளியில் நடக்கும் விஷயங்கள் குறித்து என்னைக் காட்டிலும் ஊடக நண்பர்கள் உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை மட்டுமே நான் கவனித்து வருகிறேன். எங்களது இலக்கு இறுதிப்போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என்றார்.

Summary

Pakistan head coach Mike Hesson has advised the team's players to focus only on cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.