

யு19 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.
யு19 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டி செய்து 50 ஓவர்களில் 310/4 ரன்கள் குவித்தது.
இந்த அணியில் ஃபைசல் ஷினோஜடா (110), உசைருல்லாஹ் நியாசாய் (101*) சதமடித்து அசத்தினார்கள்.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக அரைசதம் அடித்து 33 பந்துகளில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆயுஷ் மாத்ரே 63 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடக்க வீரர் ஆரோன் ஜார்ஜ் சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விஹான் மல்ஹோத்ரா 38 ரன்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்தப் போட்டியில் வென்றதுடன் யு19 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த முதல் அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு 10-ஆவது முறையாக முன்னேறி அசத்தியுள்ளது.
இங்கிலாந்துடன் இறுதிப் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (பிப்.6) மதியம் 1 மணிக்கு ஜிம்பாப்வேயில் தொடங்கவிருக்கிறது.
யு19 உலகக் கோப்பையில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்குகள்
311 - இந்தியா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (2026)
305 - நியூசிலாந்து - அயர்லாந்துக்கு எதிராக (2006)
294 - தெ.ஆ. - வங்க தேசத்துக்கு எதிராக (2022)
292 - மே.இ.தீ - இலங்கைக்கு எதிராக (2010)
279 - மே.இ.தீ. - அயர்லாந்துக்கு எதிராக (2018)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.