92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிரடியாக சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி; இறுதிப்போட்டியில் சிக்ஸர் மழை!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

News image

படம் | பிசிசிஐ

Updated On :6 பிப்ரவரி 2026, 9:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பேட்டிங்கில் மிரட்டிய சூர்யவன்ஷி! இறுதிப்போட்டியில் சிக்ஸர் மழை!

பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வரும் இந்திய அணி 23 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்து அபாரமாக விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சிக்ஸர்களாக விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 55 பந்துகளில் சதம் விளாசி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

வைபவ் சூர்யவன்ஷியுடன் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் அதிரடியாக 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.