மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தோல்வி பயத்தைக் காட்டிய நேபாளம்; போராடி வென்றது இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வென்றது.

News image

படம் | AP

Updated On :8 பிப்ரவரி 2026, 1:16 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வென்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் அரைசதம்; 185 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜேக்கோப் பெத்தேல் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 39 ரன்களும், ஜோஸ் பட்லர் 26 ரன்களும் எடுத்தனர்.

நேபாளம் தரப்பில் தீபேந்திர சிங் அய்ரீ மற்றும் நந்தன் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷேர் மல்லா மற்றும் சந்தீப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போராடி வென்ற இங்கிலாந்து!

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நேபாளம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தீபேந்திர சிங் அய்ரீ அதிகபட்சமாக 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லோகேஷ் அதிரடியாக 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேபாளம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதிரடியாக விளையாடிய லோகேஷ் நேபாள அணிக்கு வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். இருப்பினும், அழுத்தமான சூழலிலும் கடைசி ஓவரை அற்புதமாக வீசிய சாம் கரண் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவினார்.

இங்கிலாந்து தரப்பில் லியம் டாஸன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லூக் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ் மற்றும் சாம் கரண் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.