முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

News image

படம் | பிசிசிஐ

Updated On :25 பிப்ரவரி 2026, 7:05 pm IST

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. சென்னை சேப்பாக்கம் திடலில் நாளை (பிப்ரவரி 26) நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதனால் இந்திய அணியின் மீதான அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். எந்தவொரு சர்வதேசப் போட்டியில் விளையாடும்போதும், அழுத்தம் என்பது இருக்குமென்பதை நான் அதிகம் நம்புகிறேன். டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் மிகவும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அழுத்தம் என்பது இருக்கும். நாட்டுக்காக உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும்போது, கண்டிப்பாக அழுத்தம் இருக்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடவில்லை. இது குறித்து பலரும் பேசி வருவதால், இந்திய அணிக்கு அழுத்தம் என்பது இருக்கும். ஆனால், இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் திறம்பட அழுத்தத்தை எதிர்கொண்டு விளையாடக் கூடியவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், அழுத்தத்தை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது என்றார்.

Summary

Indian team batting coach Sitanshu Kotak has said that the Indian team will play under pressure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.