கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

News image
ஸ்மிருதி மந்தனா- படம் - ஏஎன்ஐ
Updated On :12 ஜனவரி 2026, 3:01 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதைத் தொடர்ந்து மற்றொரு வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தில் ஆர்சிபி களமிறங்கியுள்ளது.

மெக் லானிங் தலைமையிலான உ.பி. வாரியன்ஸ் அணி இதற்கு முந்தைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுடன் இந்தத் தொடரை தொடங்கியுள்ளது. இதனால், இம்முறை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நவி மும்பையில் இன்று (ஜன.12) நடைபெற்ற 5 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் மெக் லானிங், ஹர்லீன் தியோல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.