தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை 77 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய ஆஸி.!

மகளிர் டி20 உலகக் கோப்பையில் அசத்திய ஆஸ்திரேலிய அணி குறித்து...

News image

வங்கதேச கேப்டனை விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி. அணியினர். - படம்: ஏஎஃப்பி

Updated On :17 ஜூன் 2026, 5:57 pm IST

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 9-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

வங்கதேச மகளிரணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக நிகார் சுல்தானா 27 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீசிய கிம் கார்த், சோஃபி மோலினக்ஸ், எல்லீஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

வங்கதேசம் சார்பில் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தார்கள். 78 என்ற எளிய இலக்குடன் தனது பேட்டிங்கை செய்துவரும் ஆஸ்திரேலியா 5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது.

பெத் மூனி 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜியார்ஜியோ வோல் அதிரடியாக விளையாடி வருகிறார். எல்லீஷ் பெர்ரி நிதானமாக விளையாடி வருகிறார்.

இந்தப் போட்டியில் வென்றால் ஆஸி. அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். வங்கதேச அணிக்கு இந்தத் தோல்வி பின்னடைவச் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Women's T20 World Cup: Australia restricts Bangladesh to 77 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.