தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் தாமதாக இந்தியாவுக்கு வர பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனுமதி அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விளையாடிவிட்டு, போர் காரணமாக விமானங்கள் தடைசெய்யப்பட்டதால் அவர்களது நாட்டுக்குச் செல்ல ஒரு வாரம் காலதாமதம் ஏற்பட்டதால், யான்செனுக்கு இந்தியாவுக்கு வர கூடுதல் காலம் அவகாசம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதில் மார்கோ யான்சென் முக்கியமான பங்கினை வகித்தார்.
இந்நிலையில், அவர் மார்ச். 28ஆம் தேதிதான் அணியில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற வெளிநாட்டு வீரர்கள் மார்ச் 21ஆம் தேதியே அணியில் இணைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரர் அஸமதுல்லா ஓமர்சாய் மார்ச் 23ல் இணைவார். பாகிஸ்தான் அவரது நாட்டின் மீது போர்த் தொடுத்துள்ளதால் அவரும் இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.
மார்கோ யான்சென் அவரது வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து வர, ரிக்கி பாண்டிங் முழுமையான ஆதரவாக தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சீசனில் 16 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பேட்டிங்கிலும் சிறப்பான செயல்பாடுகளை வழங்கிய அவர் சிறந்த ஆல்ரவுண்டராகவே மாறியிருக்கிறார்.
துபை, அபுதாபி விமான நிலையங்கள் குறைவாகவே செயல்பட்டு வருவதால் மேற்கில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சற்று சிரமம் இருக்கவே செய்கிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 31ஆம் தேதி சந்திக்கிறது.
Summary
Ponting approves late arrival of Jansen in wake of delayed departure post T20WC
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரிலிருந்து இரண்டு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விலகல்!

100-ஆவது ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர்..! தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




